மீண்டுவருவோம்; நம்பிக்கையளிக்கும் விதத்தில் “கோவிட்” எனப் பெயர்சூட்டப்பட்ட புலிக்குட்டி

  • IndiaGlitz, [Tuesday,March 31 2020]

 

 

மெக்ஸிகோவின் கோர்டபா நகரில் உள்ள ஒரு தனியார் மிருககாட்சி சாலையில் புதிதாகப் பிறந்த புலிக்குட்டிக்கு “கோவிட்” எனப் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. உலகையே முடக்கியுள்ள கொரோனா CoVid-19 வைரஸின் பெயர் ஒரு புலிக்குட்டிக்கு சூட்டப்பட்டுள்ளது பற்றி மிருககாட்சி சாலையின் உரிமையாளர்கள் மகிழ்ச்சியையே தெரிவித்து வருகின்றனர்.

மார்ச் 14 ஆம் தேதி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 8 வயது பெண் புலிக்கு கடும் சிரமத்திற்கு இடையே அழகான புலிக்குட்டி பிறந்தது. கொரோனா வைரஸால் உலகமே கடும் பாதிப்புகளை சந்தித்துவரும் நிலையில் புலியின் வேதனையில் நாங்களும் சிரமத்தைச் சந்தித்தோம். பின்னர் புலிக்குட்டியின் பிறப்பு மகிழ்ச்சியைத் தந்தது. அதைப்போன்று இந்த உலகமும் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வரும். கொரோனா வைரஸில் இருந்து உலகம் மீண்டும் வரவேண்டும் என்ற நம்பிக்கையில் கோவிட் என்று பெயர் சூட்டியுள்ளோம் எனவும் மிருககாட்சி சாலையிலன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.  இந்த மிருககாட்சி சாலை சர்க்கஸ் போன்ற வணிகத்தில் இருந்து விலங்குகளைக் காப்பாற்றும் நோக்கில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

More News

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 74 ஆனது

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் டெல்லி மாநாடு??? நடந்தது என்ன???

டெல்லியில் நிஜாமுதின் பகுதியில் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்த மாநாட்டில் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா போன்ற பல வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

கடைகளில் வாங்கும் காய்கறி, பழங்கள் மூலம் கொரோனா பரவுமா? அதிர்ச்சி தகவல்

கடைகளில் வாங்கும் காய்கரி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களிலும் கொரோனா வைரஸ் இருக்குமா என்ற அச்சம் அனைவருக்கும் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அமெரிக்க உணவுப்பொருள் வல்லுனர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

டெல்லி மத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 6 பேர் கொரோனாவால் பலி: அதிர்ச்சி தகவல்

மார்ச் 13 முதல் 15 வரை டெல்லியில் ஒரு குறிப்பிட்ட மத நிகழ்ச்சி ஒன்று நடந்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதில்

கொரோனா மரணத்திற்கு முன் 6 குழந்தைகளுடன் வாக்கி-டாக்கியில் பேசிய தாய்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் 6 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர்,