close
Choose your channels

அதிகரித்து வரும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: கொரோனாவில் இருந்து மீள்கிறதா தமிழகம்?

Friday, July 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ்நாட்டில் இன்று 3680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக 4000க்கும் குறைவாக இருந்த தமிழக கொரோனா தொற்று நேற்று மீண்டும் 4000ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 4000க்கு குறைந்துள்ளது என்பதும், சென்னையில் வழக்கம்போல் 1200 என்ற அளவிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 130,261 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 64பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1829 என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4163 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82,324 ஆகும். கடந்த சில நாட்களாகவே 3000 முதல் 4000 வரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருவதால் தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 35921 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 15,29,092 குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.