தமிழகம் கலவர பூமியாகும். மத்திய அமைச்சரே இப்படி மிரட்டுவதா?

  • IndiaGlitz, [Monday,July 10 2017]

ஒரு நாட்டின் மத்திய அமைச்சர் ஒருவரே தமிழகம் கலவர பூமியாகும் என்று மிரட்டியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரும், தமிழகத்தின் ஒரே பாஜக எம்பியுமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த தொகுதியான நாகர்கோவிலுக்கு இன்று சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த பொன்ராதாகிருஷ்ணன், 'தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், இந்து அமைப்பினர் மீது தாக்குதலை நிறுத்த தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து அமைப்பினர் மீதான தாக்குதல் நீடித்தால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று தமிழக அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எச்சரிக்கை செய்தார்.
இரு பிரிவினர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் அந்த பிரச்சனை தீர்த்து வைக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள மத்திய அமைச்சர் ஒருவரே இவ்வாறு கலவர பூமியாகும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்டவர் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று பொறுப்புடன் கூற வேண்டிய அமைச்சர், இவ்வாறு எதிர்மறையாக பேசியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது மட்டுமின்றி அவருக்கு மூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

More News

'விஐபி 2' விழாக்களில் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொள்ளாதது ஏன்? செளந்தர்யா

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், கஜோல் நடித்த 'விஐபி 2' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் சரி, சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி தனுஷின் மனைவியும், இயக்குனர் செளந்தர்யாவின் சகோதரியுமான ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை...

ஹாலிவுட் பட ஸ்டைலில் ஒரு வித்தியாசமான திருட்டு: 3 கிலோ நகைகள் கொள்ளை

பெங்களூரில் உள்ள ஒரு நகைக்கடையில் ஹாலிவுட் பட ஸ்டைலில் 3 கிலோ நகைகளை ஒரு திருடன் கொள்ளையடித்துவிட்டு மாயமாகியுள்ளான். அந்த திருடனை பிடிக்கும் முயற்சியில் பெங்களூர் போலீசார் தீவிரவேட்டையில் உள்ளனர்...

பிஜி தீவில் வெங்கட்பிரபுவின் பிரமாண்டமான 'பார்ட்டி' ஆரம்பம்

'சென்னை 60002'8 படத்தின் 2ஆம் பாகத்தை அடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் 'பார்ட்டி' என்ற படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியான செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்...

மணிரத்னம் அடுத்த படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது...

'எங்கடா இருந்திங்க இவ்வளவு நாளா?: தயாரிப்பாளர் ஆனார் 'நான் கடவுள்' ராஜேந்திரன்

ஸ்டண்ட் நடிகராக இருந்த ராஜேந்திரன், இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' படத்தின் மூலம் நடிகரானார். அதன் பின்னர் விஜய், அஜித் உள்பட பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்...