close
Choose your channels

அன்பு, அன்புன்னு இனிமேல் யார் பக்கத்திலயும் உட்கார முடியாது: நெருக்கடியில் மும்தாஜ்?

Thursday, September 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் சீனியர், பாசமழை பொழிபவர், மெச்சூரிட்டியானவர், ஹைஜீனிக்காக உள்ளவர் என்ற பல பெருமைகளுடன் வலம் வந்து கொண்டிருந்த மும்தாஜின் வேஷம் தற்போது ஒட்டுமொத்தமாக கலைந்துவிட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் 100 நாள் நன்றாக சாப்பிட்டு, தூங்க மட்டுமே வந்துள்ளதாக பலர் விமர்சனம் செய்துவரும் நிலையில் இன்று ரித்விகாவிற்காக கொடுக்கப்படும் டாஸ்க்கை செய்ய மறுத்ததால் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் வெறுப்புக்கு ஆளாகிறார்.

இவ்வளவு நாள் நீங்கள் காண்பித்த அன்பு பொய்யா? என பாலாஜியும், இனிமேல் அன்பு, அன்புன்னு இனிமேல் யார் பக்கத்திலயும் உட்கார முடியாது என்று விஜயலட்சுமியும், ஹெல்த் பிரச்சனையையும் தாண்டி இந்த வீட்டில் நிறைய விஷயங்கள் நீங்கள் செய்துள்ளீர்களே என்று யாஷிகாவும், கூறுவதால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த வீடே அவருக்கு எதிராக களமிறங்கியுள்ளது.

போகிற போக்கை பார்த்தால் மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்து ஐஸ்வர்யாவுக்கு பதில் மும்தாஜை இந்த வாரம் மக்கள் வெளியேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒருவேளை ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் செய்யும் தந்திரமா? என்று கூட சந்தேகிக்கும் வகையில் உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.