3 வயதில் உலகச் சாதனை படைத்த ஈரோட்டு சிறுமி… குவியும் பாராட்டுகள்!!!

  • IndiaGlitz, [Monday,October 19 2020]

 

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி தனது அபார நினைவாற்றல் திறன் காரணமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அச்சிறுமிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோபிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த பிரதீபா-இளமாறன் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை ப்ரவ்யா சாய். இவர் பல்வேறு மலர்கள், காய்கறிகள், நிறங்களின் பெயர்களை சரியாகவும், வேகமாகவும் கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வந்தார். இதுதொடர்பாக வீடியோவும் சமூகவலைத் தளங்களில் வெளியாகி இருந்தது. இந்த வீடியோவிற்கு நம் நெட்டிசன்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வந்த நிலையில் கின்னஸ் சாதனை அமைப்பினரும் இந்த வீடியோவை பார்த்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் குழந்தையின் பெற்றோரைத் தொடர்பு கொண்ட கின்னஸ் சாதனை அமைப்பு குழந்தையின் நினைவாற்றலை பரிசோதிக்க விரும்பினர். அதைத் தொடர்ந்து குழந்தை ப்ரிவ்யாவின் நினைவாற்றலை சோதித்த கின்னஸ் சாதனை அமைப்பு தற்போது அவருக்கு உலகச் சாதனையை நிகழ்த்தியதற்கான பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்து உள்ளனர். சோதனையின்போது குறைந்த நேரத்தில் அதிக பொருட்களின் பெயர்களை கூறி சிறுமி இந்தச் சாதனையை நிகழ்த்தியதாகவும் அந்த அமைப்பினர் பாராட்டுகளைத் தெரிவித்து உள்ளனர்.

More News

மாட்டுச்சாணம் கதிர்வீச்சை கட்டுப்படுத்துமா??? வகை தொகையாக கேள்வி எழுப்பும் 600 விஞ்ஞானிகள்!!!

செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தடுக்கும் வகையில் மாட்டுச் சாணத்தை கொண்டு  புதிய “சிப்” உருவாக்கப் பட்டுள்ளதாக ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியிருக்கிறார்

கொரோனாவுக்கு ஏற்ற சிகிச்சை முறை… இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது சிறுமி அசத்தல்!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் சிறுமிக்கு இளம் விஞ்ஞானிகள் விருது வழங்கி கவுரவிக்கப் பட்டுள்ளது.

தமிழக முதல்வருடன் விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான '800' என்ற திரைப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதிக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில்

பெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு

யோகி பாபு ஹீரோவாக நடித்த 'பேய் மாமா' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, 'பெண் இயக்குனர் ஒருவரின் திருமணத்திற்காக தான் இலவசமாக நடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார் 

பெண் இயக்குனரின் திருமணத்திற்காக இலவசமாக நடித்தேன்: யோகிபாபு

யோகி பாபு ஹீரோவாக நடித்த 'பேய் மாமா' என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய யோகி பாபு, 'பெண் இயக்குனர் ஒருவரின் திருமணத்திற்காக தான் இலவசமாக நடித்துக் கொடுத்ததாக கூறியுள்ளார்