வீடியோ காலில் ஆபாசமாகப் பேச்சு- பெண்ணிடம் பணத்தைப் பறிகொடுத்த வாலிபர்!!!

  • IndiaGlitz, [Monday,August 31 2020]

 

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பயந்தரை பகுதியில் உள்ள இளைஞருக்கு ஒருவருக்கு ஒரு வீடியோ கால் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐடி துறையில் வேலைப் பார்க்கும் அந்த இளைஞர் கொரோனா பரவல் காரணமாக வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு வந்த வீடியோ காலை யாராக இருக்கும் என்ற சந்தேகத்துடன் இளைஞர் எடுத்துப் பேசியிருக்கிறார். மறுமுனையில் பேசியது ஒரு பெண். தொடக்கத்திலேயே கொஞ்சலாகப் பேசிய அந்த பெண்மணி தொடர்ந்து ஆபாசமாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்.

இப்படி பல முறை தொடர்ந்து பேசிய பெண்மணியிடம் இளைஞரும் ஆர்வமாகப் பேசியிருக்கிறார். அப்போது ஆடையைக் களைந்து விட்டு தன்னிடம் பேசுமாறு பெண்மணி கோரிக்கை வைத்திருக்கிறார். இளைஞரும் ஆடையைக் களைந்து விட்டு வீடியோ காலில் பெண்மணியோடு ஆபாசப் பேச்சுகளைத் தொடர்ந்து இருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்மணி ரூ.50 ஆயிரம் பணத்தை அனுப்பு இல்லாவிட்டால் உனுடைய வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் எனக் கூறி இளைஞருக்கு வீடியோவையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த இளைஞர் பெண்மணியை போனில் அழைத்து மிரட்டியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த பெண்மணி நான் சிபிஐ அதிகாரி. எனக்கு பணத்தை அனுப்பு, இல்லாவிட்டால் நான் வீடியோவை இணையத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியிருக்கிறார். பயந்துபோன இளைஞர் பெண்மணியின் வங்கிக் கணக்கில் 37 ஆயிரத்தை அனுப்பியிருக்கிறார். பணத்தை பெற்றுக் கொண்ட பெண்மணி மீண்டும் சில நாட்கள் கழித்து இப்படியே மிரட்ட ஆரம்பித்து இருக்கிறார். நிலைமையை சமாளிக்க முடியாத இளைஞர் தற்போது போலீஸாரிடம் புகார் கொடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீஸார் பணக் கொள்ளையில் ஈடுபட்ட பெண்மணியைக் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

More News

மனித மூளைக்குள் கம்பியூட்டர் சிப்பா??? கதிகலங்க வைக்கும் புதிய திட்டம்!!!

அமெரிக்காவில் உள்ள தனியார் விண்வெளித்துறை நிறுவனமான SpaceX இன் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தற்போது உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

மகளுக்காகச் சிறையில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை வைத்து ஸ்மார்ட்போன் வாங்கிய தந்தை!!!

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் தற்போது ஆன்லைன் வகுப்புகளை தொடங்கிவிட்டன.

கண்ணாமூச்சி விளையாடிய 8 வயது சிறுமி- உடனிருந்த சிறுவர்களே கூட்டு பலாத்காரம் செய்த கொடுமை!!!!

மேற்கு திரிபுராவின் தபாரியா மாவட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடிய சிறுவர்கள் ஒன்றாகச் சேர்ந்து 8 வயது சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

சூர்யா கொடுத்த ரூ.20 லட்சம் யார் யாருக்கு? நடிகர் சங்கம் அதிரடி அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கம் தற்போது தமிழக அரசின் தனி அதிகாரி வசம் இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிகர் சங்கத்திற்கு கொடுத்த ரூ.20 லட்சத்தை பிரித்து கொடுப்பது குறித்த

50 ஆண்டு பழமையான திரையரங்கம் மூடல்: வடசென்னை ரசிகர்கள் அதிர்ச்சி

வட சென்னையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த திரையரங்கம் நாளை முதல் மூடப்படுவதாக வெளிவந்துள்ள செய்தியால் அப்பகுதி சினிமா ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்