close
Choose your channels

100 வருட தமிழ் சினிமாவில் 'வலிமை' மட்டுமே செய்த சாதனை: திருப்பூர் சுப்பிரமணியம்

Saturday, February 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

100 வருட தமிழ் சினிமாவில் ‘வலிமை’ மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அஜீத் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானதாக கூறப்பட்டது.

ரஜினி விஜய் படங்கள் கூட 700 முதல் 800 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் ‘வலிமை’ திரைபடம் கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது கோலிவுட் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது .

இந்த நிலையில் இது குறித்து தமிழக திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் கூறியபோது ’தமிழ் சினிமா வரலாற்றில்100 வருடத்தில் ‘வலிமை’ மட்டும்தான் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி எல்லா பக்கமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.