close
Choose your channels

முக ஸ்டாலினை சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள்: தியேட்டர்களுக்கு விடிவு காலம் வருமா?

Wednesday, May 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை மறுநாள் 9 மணிக்கு தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஏற்கனவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக ஒட்டுமொத்த திரையுலகமும் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் சற்று முன்னர் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளான பன்னீர்செல்வம், ஐட்ரிம்ஸ் மூர்த்தி, டாக்டர் ஹரி கோவிந்த், மதிவாணன் உள்ளிட்டோர் ஸ்டாலினை சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். இதில் ஐட்ரீம்ஸ் மூர்த்தி அவர்கள் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு காரணமாக திரையரங்குகள் தற்போது மூடப்பட்டு இருக்கும் நிலையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்குவாரா? திரையரங்குகளுக்கு விடிவுகாலம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.