முதல்வரை சந்திக்கும் திரையரங்க உரிமையாளர்கள்: ஆயுதபூஜையன்று தியேட்டர்கள் திறக்கப்படுமா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன என்பது தெரிந்ததே. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையரங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்

இந்த நிலையில் கடந்த 15ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவை உள்பட பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன

இந்த நிலையில் தமிழகத்திலும் திரையரங்குகள் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து முதல்வரை நேரில் சந்திக்கவும் திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வரை தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்து பேசுகின்றனர். அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம் தலைமையில் திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் வரும் ஆயுத பூஜை அன்றே திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த சந்திப்பு முடிவடைந்ததும் தமிழக அரசிடமிருந்து திரையரங்குகள் திறப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

தமிழக முதல்வரை நேரில் சந்தித்த திரையுலக பிரபலங்கள்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் சமீபத்தில் காலமானதை அடுத்து முதல்வரின் வீட்டிற்கு நேரில் சென்று அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர் 

அர்ச்சனாவை அடுத்து மேலும் ஒரு வைல்ட்கார்ட் எண்ட்ரி: விறுவிறுப்பாகும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் 15 போட்டியாளர்களும் அதன்பின் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனாவும் வருகை தந்தனர்

80 அடி நீர்வீழ்ச்சியில் மாட்டிக் கொண்டு தவித்த தமிழக மருத்துவ மாணவர்… பரபரப்பு சம்பவம்!!!

தமிழகத்தைச் சார்ந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார்

எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நான் குழந்தை இல்லை, என்னைவிட சின்ன பையன் அவன்: அனிதா புலம்பல்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் படலம் முடிந்தவுடன் ஆரி மற்றும் சோம்சேகர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் இடையில் நின்று கொண்டிருந்த அனிதா பொங்கி எழுந்தார் 

விஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது சுமார் அரை டஜனுக்கும் மேலான படங்களில் நடித்து வரும் நிலையில் அவற்றில் ஒன்று 'துக்ளக் தர்பார்' என்பது குறிப்பிடத்தக்கது.