தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,October 31 2020]

தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து, அடுத்தகட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது

நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30 வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்த போதிலும், மேலும் ஒரு சில தளர்வுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நீண்ட நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை தமிழக அரசால் ஏற்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி நவம்பர் 16தேதி முதல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 16 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

மேலும் நவம்பர் 10ஆம் தேதியில் இருந்து பூங்காக்களும் செயல்பட தமிழக அரசு அனுமதித்துள்ளது என்பதும், புறநகர் ரயில்சேவை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

More News

அர்ச்சனாவை வஞ்சப்புகழ்ச்சி செய்கிறாரா கமல்ஹாசன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய அடுத்த புரமோவில் அர்ச்சனாவை புகழ்வது போல கமலஹாசன் கிண்டல் செய்வது போல் வெளிவந்திருக்கும் வீடியோ நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது.

கே.பாக்யராஜ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் யூடியூப் பிரபலம்!

பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'முந்தானை முடிச்சு' படத்தில் இடம்பெற்ற முருங்கைகாய் காமெடியை யாராலும் மறக்க முடியாது.

தனுஷின் அடுத்த படத்தின் நாயகியாகும் ஒரே படத்தில் பிரபலமான நடிகை!

தனுஷின் அடுத்த படத்தில் ஒரே படத்தில் பிரபலமான நடிகை நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனக்குரிய Hus இன்னும் கிடைக்கல… 10 கல்யாணம் முடிஞ்சு 11 ஆவது முறையாக மணப்பெண் போட்ட கண்டிஷன்!!!

அமெரிக்காவில் ஒரு பெண் 10 திருமணங்களைச் செய்த பிறகும் சரியான துணை கிடைக்காமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

பாரதிராஜா மகன் இயக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு! 

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்பதும் அவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் தான் திரை உலகில் மிகப்பெரிய இடத்தில் இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே