தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்படுகிறதா திரையரங்குகள்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Thursday,July 16 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் புதிய திரைப்படங்கள் எதுவும் திரையரங்குகளில் செய்யப்படவில்லை என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன. குறிப்பாக ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ கீர்த்தி சுரேஷின் ’பெண்குயின்’, யோகிபாபுவின் ’காக்டையில்’ உள்பட பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் இன்னும் சில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

இந்த நிலையில் அரசு நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். எனவே ஆகஸ்ட் 1முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டால் சினிமா ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய நடிகர்களின் படங்களை வழக்கம்போல் திரையரங்குகளில் கண்டுகளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

More News

வந்தால் ஐபிஎஸ் அதிகாரியாக வருவேன்: குஜராத் சிங்கப்பெண் சபதம்

குஜராத் மாநிலத்தின் சுகாதார அமைச்சரின் மகனின்  நண்பர்கள் சாலையில் ஊரடங்கு நேரத்தில் சுற்றி திரிந்ததை கண்டித்த பெண் போலீஸ் அதிகாரி சுனிதா இடமாற்றம் செய்யப்பட்டார்

9 மாத குழந்தை கொரோனாவுக்கு பலி! புதுவையில் அதிர்ச்சி

புதுவையில் 9 மாத குழந்தை ஒன்று கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

உலகிலேயே விலை மலிவான கொரோனா பரிசோதனை கருவி: இந்திய ஐஐடி நிறுவனத்தின் புதிய சாதனை!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனையும் அதிகரித்து இருப்பதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

கந்த சஷ்டி கவசம் விவகாரம்: மேலும் ஒருவர் போலீசில் சரண் 

யூடியூப் சேனல் ஒன்று கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததால் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது

உங்க இஷ்டத்துக்கெல்லாம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடியாது!!! கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு!!!

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் கல்வி துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது