close
Choose your channels

ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் கொடுத்திருக்காங்க: ரேணிகுண்டா நடிகரின் வீடியோ

Thursday, April 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர். வீட்டு வாடகை, சாப்பாடு போன்றவற்றுக்காக பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் நலிந்த நடிகர்களுக்கு நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளும், நடிகர்களும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் உதவி பெற்ற ரேணிகுண்டா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த ‘தீப்பட்டி கணேசன்’ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

ஒரு மாதத்திற்கு, வீட்டுக்கு தேவையான பொருட்களை கொடுத்திருக்காங்க. பிரேம்குமார், பூச்சி முருகன், விஷால், ஸ்ரீமன் ஆகியோர் மூலம் ஒரு மாதத்திற்கு, வீட்டுக்கு தேவையான பொருட்களை கொடுத்திருக்காங்க. ஸ்ரீமன் அவர்கள் என்னுடைய அக்கவுண்டில் பணம் போட்டுள்ளார். உதவி செய்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.