கார்த்தி மிகவும் அமைதியானவர்: 'தீரன்' வில்லன் நடிகர் ரோஹித் பதக் புகழாரம்

  • IndiaGlitz, [Monday,November 20 2017]

கார்த்தி நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் கார்த்திக்கு இணையாக நடித்தவர்கள் வில்லன்கள் இருவர். அவர்கள் அபிமன்யசிங் மற்றும் ரோஹித் பதக். ஒரு படத்தில் எந்த அளவுக்கு வில்லன் கேரக்டர் அழுத்தமாக இருக்கின்றதோ, அந்த அளவுக்கு படத்தின் விறுவிறுப்பும் அதிகமாக இருக்கும் என்பதை நிரூபித்த படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் கிளைமாக்ஸில் தவிர மற்ற அனைத்து காட்சிகளிலும் வில்லன் கைகளே ஓங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கார்த்தியுடன் நடித்த அனுபவம் குறித்து வில்லன் நடிகர் ரோஹித் பதக் கூறியதாவது;

கார்த்தி போன்ற தலைசிறந்த நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியான ஒன்று. அவர் அதிகம் ஒத்துழைக்கக்கூடிய சிறந்த நபர் ஆவார். நானும் கார்த்தியும் அவரவர் திரை துறையை பற்றி அதிகம் விவாதிப்பது உண்டு.அவர் மிகவும் அமைதியானவர் , என்னோடு நட்பாக பழகுவார். முக்கியமான காட்சிகளில் எனக்கு உதவுவார். சில நேரங்களில் நான் மிகவும் பயங்கரமான சண்டை மற்றும் சேசிங் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும். பஸ் மேல் படமாக்கப்பட்ட பரபரப்பான ஆக்சன் காட்சியை படம்பிடிக்க 9 முதல் 10 நாள் ஆகியது. தினமும் அந்த காட்சியை படமாக்கும் போது நானும் கார்த்தியும் பஸ் மேல் ஏறி அமர்ந்திருப்போம். இந்த காட்சியை படமாக்க ஸ்டன்ட் மாஸ்டர் தினேஷ் எங்களுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு தந்தார். இப்போது நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். சண்டை காட்சியை படமாக்கும் போது தன்னுடைய உதவியாளர்களை என்னோடு இருக்குமாறு கூறி பாதுகாப்பாக அக்காட்சிகளை படம்பிடித்தார் தினேஷ்.

படம் ரிலீஸ் ஆகும் நாள் அன்று என்னுடைய கைபேசியை அனைத்து வைத்திருந்தேன். படத்துக்கு என்ன ரிசல்ட் வருமோ. எல்லோரும் படத்தை பற்றி என்ன எழுத போகிறார்களோ என்றோ பயந்துகொண்டு இருந்தேன். ஆனால் படத்துக்கு நல்ல விமர்சனம் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது' என்று ரோஹித் பதக் கூறியுள்ளார்.

 

More News

விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் இணைந்த அதிசய நிகழ்வு

கோலிவுட்டில் தயாராகி வரும் நான்கு படங்களில் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் நடைபெறுகிறது.

அதர்வாவின் 'செம போத ஆகாதே' பாடல்கள்-டிரைலர் ரிலீஸ் தேதி

அதர்வா நடித்து, தயாரித்து வரும் 'செம போத ஆகாதே' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆரம்பித்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம்: யூனிசெப் தூதர் த்ரிஷா கருத்து

யூனிசெப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம் செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

'தீரன்' படத்தை திருட்டு இணையதளத்தில் பாருங்கள்: தயாரிப்பாளரின் தைரியமான பதில்

கார்த்தி, ராகுல் ப்ரித்திசிங் நடிப்பில் வினோத் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் கார்த்தியின் பெஸ்ட் படமாக அமைந்திருக்கும் நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.