ரஜினியின் 'தர்பார்' பழம்பெரும் நடிகரின் பேரன்!

  • IndiaGlitz, [Wednesday,September 04 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தர்பார்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்பையில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் நிலையில் தற்போது பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தேங்காய் சீனிவாசன் பேரன் ஆதித்யா இந்த படத்தில் இணைந்துள்ளார். ரஜினியுடன் ஆதித்யா நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடித்ததில் தனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்ததாக ஆதித்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியுடன் '2.0' மற்றும் 'பேட்ட' ஆகிய படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த 'பில்லா' உள்பட ஒருசில படங்களில் தேங்காய் சீனிவாசன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது அவருடைய பேரன் நடிக்க வரும் நிலையிலும் ரஜினி இன்னும் ஹீரோவாகவே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமித்ஷாவின் பதவியை கொடுத்தாலும் ரஜினி ஏற்க மாட்டார்: பிரபல அரசியல்வாதி

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது

ஒட்டுமொத்த உலகத்திலேயே அவங்களுக்கு ஒரு நியாயம், நமக்கு ஒரு நியாயம்: கவின்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு யார் மணி கட்டுவது என இத்தனை வாரங்களாக தவித்து கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக கவின் துணிந்து வனிதாவை எதிர்த்து வருகிறார்

ஆர்யாவின் 'மகாமுனி' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்

ஆர்யா நடித்த 'மகாமுனி' திரைப்படம் வரும் 6ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது 

பாலிவுட் படத்திற்காக விஜய் பட வாய்ப்பை தவிர்த்த பிரபல நடிகை!

விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 64' திரைப்படத்திற்காக முதலில் நாயகியாக பரிசீலனை செய்யப்பட்டவர் ராஷ்மிகா மந்தனா என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவரிடம் மீண்டும் படக்குழுவினர் அணுகியபோது

பழிவாங்க காத்திருக்கும் சாக்சி: கவின் நிலைமை என்ன?

பிக் பாஸ் வீட்டில் வனிதா என்ற ஒரு வைல்ட் கார்டு எண்ட்ரியையே சக போட்டியாளர்களால் சமாளிக்க முடியாத நிலையில் தற்போது சாக்ஸி, அபிராமி மற்றும் மோகன் வைத்யா ஆகிய மூன்று விருந்தினர்கள் புதிதாக வந்துள்ளனர்