திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கையால் திரையுலகினர் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Tuesday,November 30 2021]

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகள் உள்பட பொது இடங்களில் தடுப்பு ஊசியை செலுத்தாதவர்களை அனுமதிக்க கூடாது என தமிழக அரசின் சுகாதாரத்துறை நிபந்தனை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிபந்தனைக்கு திரையுலகினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் என்பதும் ’மாநாடு’ தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று கூட்டமொன்றில் பேசிய போதும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து மற்ற மாவட்ட கலெக்டர்களும் இதேபோன்று அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது என்பதால் திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More News

செம்மையா பண்ற நீ: மீண்டும் மோதும் தாமரை-பிரியங்கா!

கடந்த சில நாட்களாகவே தாமரை மற்றும் பிரியங்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது என்பதும் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

மாறி மாறி பேசும் பிக்பாஸ் ராஜூ: நெட்டிசன்கள் போட்ட குறும்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கேப்டன் நிரூப் கூறிய ஒரு ஐடியாவுக்கு இமான் அண்ணாச்சி, வருண் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதும் இதனால் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

சிஎஸ்கே தக்க வைத்து கொண்ட நான்கு வீரர்கள் இவர்களா?

2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைந்து உள்ளதை அடுத்து ஒட்டுமொத்த 10 அணிகளுக்குமான வீரர்களின் ஏலம் டிசம்பர் இறுதியில்

கொரோனா பாதிப்பில் கமல்: 'விக்ரம்' படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உலக நாயகன் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் தொகுத்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாற்றம் ஏற்பட்டது என்பதும், அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி

அதிகாலை 3 மணிக்கு ப்ரியா அட்லி எடுத்த செல்பி: இணையத்தில் வைரல்!

அதிகாலை 3 மணிக்கு எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.