மனிதர்களின் தொல்லையே இல்லை!!! கடலில் இருந்து வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள்!!!

  • IndiaGlitz, [Wednesday,April 01 2020]

 

கொரோனா நோய்த்தொற்று பரவியதில் இருந்து பெரும்பலான நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே சுற்றுலாத் தளங்கள், கடற்கரைகள் எல்லாம் வெறிசோடி கிடக்கின்றன. இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொண்ட Ridley Olive வகை ஆமைகள் ஒடிசாவின் கடற்கரையில் தற்போது மகிழ்ச்சியாக கடற்கரை காற்றை சுவாசித்து வருகின்றன. மேலும், Gahirmatha, Rushikulya கடற்கரை பகுதிகளில் சுமார் 8000 ஆமைகள் இனப்பெருக்கத்துக்காகத் தற்போது கடலில் இருந்து வெளியே வந்துள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாததால் அவை சுதந்திரமாக சுற்றித் திரியும் காட்சியை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி “1000 ஆமைகள் ஒன்றுகூடினாலே அது வெகுஜனக் கூடலாகத்தான் இருக்கும். ஆமைகள் முட்டைப் பொறித்த இடத்திற்கு மீண்டும் முட்டையிடுவதற்காக மிகவும் மகிழ்ச்சியாக வந்து செல்கின்றன” எனப் பதிவிட்டுள்ளார். மனிதர்களின் நடமாட்டம் பெரும்பாலான உயிரினங்களில் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துவிடுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால் பல்வேறு உயிரினங்கள் எந்த தொந்தரவும் உலகம் முழுவதும் சுற்றித்திரிகின்றன. ஆனால் கூடிய விரைவில் விலங்குகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதும் வருத்தத்திற்குரியது.

 

 

More News

தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மாலை அணிவித்த பொதுமக்கள்: நெகிழ்ச்சி வீடியோ

நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும், காவல்துறையினரும் இரவு

மூன்று மாதங்களுக்கு சிலிண்டர் இலவசம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

பாரதப் பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு கட்டணம் இன்றி சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்

LPG  கேஸ் சிலிண்டர் விலையில் ரூ. 65 வரை குறைப்பு!!!

மத்திய அரசு ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு 12 LPG கேஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்கிவருகிறது.

கிருமி நாசினி சுரங்கம் கட்டிய கலெக்டர்: குவியும் பாராட்டுக்கள்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வெளியே வந்து கொண்டுதானிருக்கின்றனர்.

போதையில் இருந்து மீண்டது எப்படி? 'தலைவி' பட நாயகி பேட்டி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கங்கனா ரணாவத், தான் சிறுவயதில்