என் ரசிகர்களை நண்பர்கள் என்று கூறுவதில் எனக்கு பெருமை: விஜய்

  • IndiaGlitz, [Tuesday,October 17 2017]

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா மற்றும் தெலுங்கு மாநிலங்கள் உள்பட இந்தியா முழுவதிலும் ஏன் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. விஜய் நடித்த ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும்போது அந்த நாளை ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் உணர்ச்சிமயமாக கேட்ட கேள்வி ஒன்றுக்கு அதே உணர்ச்சிமயமான பதில் ஒன்றை விஜய் அளித்துள்ளார். அந்த ரசிகர் கேட்ட கேள்வி இதுதான். ஒரு சாதாரண நட்சத்திரமாக திரையுலகில் நுழைந்த உங்களுக்கு அன்று இருந்த ரசிகர்கள் கூட்டத்தை விட இன்று நீங்கள் பெற்றுள்ள ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு. இந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறித்து அதாவது நம் பின்னால் இத்தனை பேர் உள்ளார்களா? என்பதை நினைக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? என்று கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு பதில் கூறிய விஜய், 'நான் சினிமாவில் அறிமுகமாகும்போது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் அறிமுகமானேன். ஆனால் கடவுள் அருளால் எனக்கு கிடைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். இதற்கு அவர்கள் ஒரு காரணம் என்றாலும் எனது ஒவ்வொரு படத்திற்கும் ஆதரவு கொடுத்த ரசிகர்களாகிய நீங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். என்னுடைய ரசிகர்கள் ஒரு நல்ல இடத்தில் என்னை உட்கார வைத்துள்ளார்கள் என்பது எனக்கு புரிகிறது. உங்களை என்னுடைய ரசிகர்கள் என்று சொல்வதை விட நண்பர்கள் என்று சொல்லத்தான் ஆசைப்படுகிறேன். உங்களுடைய ஆதரவில்லாமல் எனக்கு இந்த இடம் இல்லை. நீங்கள் இல்லாமல் நான் இல்லை' என்று உணர்ச்சிப்பெருக்குடன் பதிலளித்துள்ளார்.

More News

சிம்பு பாடிய 100வது பாடல் இதுதான்

தமிழ் திரையுலகில் ஒருவர் பல துறைகளிலும் வெற்றி காண்பது என்பது அபூர்வமாகவே நடந்து வரும் நிகழ்வு. அந்த வகையில் அஷ்டவதானி என்று தமிழ் திரையுலகினர்களால் அழைக்கப்படும் டி.ராஜேந்தரின் கலையுலக வாரிசு சிம்பு

ஜப்பான் தளபதி ரசிகர்களுக்கும் தீபாவளி விருந்து

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் அவரது ரசிகர்களுக்கான தீபாவளி விருந்தாக நாளை முதல் உலகம் முழுவதும்..

தனுஷ் ரசிகர்களுக்கு கிடைக்கும் தீபாவளி விருந்து

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தி படத்திற்கு பயன்படுத்தப்படும் தளபதியின் சூப்பர் ஹிட் பாடல்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' இன்று வெளிநாடுகளிலும் நாளை தமிழகம் உள்பட இந்தியாவிலும் பிரமாண்டமாக சுமார் 4000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்திய இசையுலகில் அனிருத்தின் முதல் முயற்சி

ராக் ஸ்டார் அனிருத் நேற்று தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், பிறந்த நாளில் மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பால் அனிருத் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.