close
Choose your channels

கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் செய்த வினோத காரியம்!

Monday, May 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அமெரிக்காவில் ஒரு வீட்டில் திருட வந்த திருடன் அந்த வீட்டையும், அந்த வீட்டில் உள்ள கழிவறையையும் சுத்தம் செய்துவிட்டு சென்றுள்ள வினோத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். திருடன் கழிவறையை சுத்தம் செய்தது மட்டுமின்றி காகித ரோஜா ஒன்றையும் கழிவறையில் வைத்திருப்பதாகவும் வீட்டின் உரிமையாளர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் Massachusetts என்ற பகுதியை சேர்ந்த நேட் என்பவர் தனது ஐந்து வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். அவர் சமீபத்தில் வீட்டை பூட்டிவிட்டு தனது மகனுடன் வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பியபோது தனது வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் திருடன் தனது வீட்டில் புகுந்துவிட்டதாக எண்ணி அதிர்ச்சி அடைந்த அவர் தனது உடமைகளள சரிபார்த்தார். ஆனால் எந்த பொருளும் திருடு போகவில்லை.

ஆனால் அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தனது வீடு முழுவதும் தூய்மையாக இருந்தது. கட்டில், மெத்தை, தனது மகனின் விளையாட்டு பொம்மைகள், கிச்சன், டாய்லட், பாத்ரூம் என அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டிருந்ததை கண்டு ஆச்சரியம் அடைந்தார். அதுமட்டுமின்றி டாய்லட் பேப்பரில் ஒரு ரோஸ் செய்யப்பட்டும் வைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்து நேட் ஆச்சரியம் அடைந்தார். ஆனால் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கூறியபோது ஹவுஸ்கீப்பிங் செய்யும் ஊழியர் முகவரி மாறி வந்திருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். இருப்பினும் இதுகுறித்த வீட்டின் உரிமையாளரின் ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.