ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த தேசியவிருது பெற்ற கலைஞர்

  • IndiaGlitz, [Sunday,May 20 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து வெகுவிரைவில் அவருடைய இன்னொரு படமான '2.0' திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை முதல் தொடங்கவிருப்பதால், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சமீபத்தில் விஜய்சேதுபதி இணைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக தேசியவிருது பெற்ற திரு இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் சமீபத்தில் வெளிவந்த கார்த்திக் சுப்புராஜின் 'மெர்க்குரி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் படக்குழுவினர் குறித்த முழு அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.

More News

'செம போத ஆகாதே': மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

அதர்வா நடிப்பில் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய 'செம போத ஆகாதே' திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் நடைபெற்றது.

திருமண விருந்துக்காக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய சப்-இன்ஸ்பெக்டர்

புதுச்சேரியில் இருந்து திருமண பார்ட்டி ஒன்றுக்காக மதுபாட்டில் கடத்தி வந்த சப் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை

மகனின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய அரவிந்தசாமி

கடந்த 90களில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரும் 'தனி ஒருவன்' படத்தின் மூலம் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கும் அரவிந்தசாமி,

எடியூரப்பா-விராத் கோஹ்லி: பெங்களூரின் தலையெழுத்து இந்த 2 பேர்களின் கையில்?

சமீபத்தில் கர்நாடக முதல்வராக பதவியேற்ற எடியூராப்பா, இன்று மாலைக்குள் தனது ஆட்சியின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில்

'இரவுக்கு ஆயிரம் கண்கள்' கதை கிடைத்தது எங்கே? இயக்குனர் கூறிய தகவல்

ஒரு திரைப்படத்தில் மிகப்பெரிய ஹீரோ நாயகனாக நடித்திருந்தாலும், அந்த படத்தின் கதை சரியில்லை என்றால் தோல்வி அடையும் என்பது கோலிவுட் திரையுலகினர்களின் அனுபவமாக இருந்து வருகிறது.