ஒரே ஒரு இமெயில்.. 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு எண்ட்கார்டு போட்ட இயக்குனர் திருச்செல்வம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வனுக்கு ஒரே ஒரு இமெயில் வந்ததாகவும் அதனை அடுத்து அவர் உடனடியாக அந்த சீரியலை முடிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ என்ற சீரியல் வரும் 8ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த சீரியல் முடிவடைய உள்ளது என்பது அந்த சீரியலில் பணிபுரியும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தெரியும் என்று கூறப்படுகிறது.
‘எதிர்நீச்சல்’ சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சூப்பராக சென்று கொண்டிருந்த நிலையில் தான் குணசேகரன் கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து திடீரென காலமானார். இதையடுத்து அவருக்கு பதிலாக வேல ராமமூர்த்தி நடித்து வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங் குறைந்ததாக சேனல் நிர்வாகம் தங்களது அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சேனல் நிர்வாகம் கூறியதாகவும் ஆனால் அதற்கு திருச்செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிகிறது. இதனை அடுத்து சேனல் நிர்வாகத்திடம் இருந்து இமெயில் ஒன்று வந்ததாகவும் அதன் பிறகு திருச்செல்வம் சீரியலை முடிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
சீரியல் குழுவினர்களுக்கே அன்றைய தினம் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க போகிறோம் என முதலில் தெரியாது என்றும், அதன்பின்னர் இதுதான் கடைசி நாள் ஷூட்டிங் என திருச்செல்வம் சொன்ன பிறகு அனைவரும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments