close
Choose your channels

தமிழக தேர்தல்: குடிசை வீட்டில் வாழும் எளிமையான வேட்பாளர் வெற்றி!

Sunday, May 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் காலையில் இருந்தே திமுக கூட்டணி தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பெரும்பாலான வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் தங்கள் சொத்து மதிப்புகளை தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் விண்ணப்பத்தின்போது காட்டிய நிலையில் குடிசையில் எளிமையாக வாழும் ஒருவரும் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

குடிசை வீட்டில் வாழும் அவர் தேர்தல் செலவு வெறும் ரூபாய் 3000 ரூபாய் மட்டும்தான் செலவு செய்தார் என்பதும் அவரிடம் இருப்பது ஒரு பழைய டூவீலர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரும் ஒரு தமிழக அரசியல் கட்சியின் வேட்பாளரா? என அனைவரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர் தான் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு 29 ஆயிரத்து 102 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது வெற்றி பெற்று உள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.