திருவான்மியூர் டிக்கெட் கவுண்டர் கொள்ளை சம்பவம்… திடீர் திருப்பத்தால் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Tuesday,January 04 2022]

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று ஊழியர் ஒருவரை துப்பாக்கிமுனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த 1.3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு சென்றதாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் அந்த ஊழியரே மனைவியுடன் சேர்ந்து நாடகமாடி பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பணியாற்றிவந்த டீக்காராம் மீனா (28) தன்னை, 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு சென்றதாக நேற்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாத நிலையில் அருகேயிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வுசெய்த நிலையில் ஒரு பெண் அந்த இடத்திற்கு வந்துவிட்டு திரும்பிச் செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் டீக்காராம் அதிகாலை 4.30 மணிக்கு தனது மனைவியிடம் வாட்ஸ் அப் காலில் பேசியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் முந்தின நாள் இரவு முதல் அவருடைய செல்போன் சிக்னல் இல்லாமல் இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார் டீக்காராம் மற்றும் அவருடைய மனைவி சரஸ்வதியிடம் விசாரித்துள்ளனர்.

இயைதடுத்து சூதாட்டம் போன்ற விஷயங்களால் கடன் தொல்லையில் இருந்துவந்த டீக்காராம் தனது மனைவியுடன் சேர்ந்து பணத்தைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைத்ததையும் தெரிவித்துள்ளார். இதனால் டீக்காராம் மற்றும் அவரது மனைவி சரவஸ்வதி இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் சம்பவம் சென்னை பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்கப்போகும் பிரபலம் இவர்தான்!

வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்க இருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தகவல் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிறந்த நாளில் வெளியான அடுத்த பட டைட்டில்: ஜீவாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் மகன் என்பது தெரிந்ததே

மனைவி, மகன்களை கொலை செய்து தற்கொலை செய்த சென்னை வங்கி அதிகாரி: ஆன்லைன் ரம்மியால் விபரீதம்

ஆன்லைன் ரம்மியால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தனது மனைவி மகன்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹீரோவாக தயாராகி வருகிறாரா சமுத்திரகனி மகன்? வைரல் புகைப்படம்!

நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அவரது மகன் ஹீரோவாக தயாராகி வருவது போன்று அந்த புகைப்படம்

'ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' பாடலை தனது பாணியில் பாடும் 'குக் வித் கோமாளி' சுனிதா!

'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலான 'ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' என்ற பாடலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சுனிதா தனது பாணியில் பாடிய வீடியோ தற்போது வைரல்