இந்த முறை பிக்பாஸ் ஈழத்தமிழர்களுக்காகவா?

பிக்பாஸ் 1 நிகழ்ச்சி மக்களை கவர்ந்த அளவுக்கு பிக்பாஸ் 2 மக்களை திருப்திபடுத்தவில்லை என்று கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பாசிட்டிவ் எனர்ஜியை தந்த ஓவியா, அவருக்கு நெருக்கடி கொடுத்த ஜூலி, காயத்ரி ரகுராம், சக்தி ஆகியோர்கள் ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியை பரபரப்பை ஏற்படுத்தினார். இன்னொரு பக்கம் சினேகன் - சுஜா மோத, ஓவியா-ஆரவ் காதல், என நிகழ்ச்சி கடைசி வரை சுவாரஸ்யமாக சென்றது.

ஆனால் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முதல் பாகம் அளவுக்கு சுவாரஸ்யம் இல்லை என்றாலும் செண்ட்ராயன், ஜனனி, ரித்விகா ஆகியோர் மக்கள் மனதை கவர்ந்தனர். யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் பிக்பாஸ் ஆதரவுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். ஒருபக்கம் தாடிபாலாஜி அவருடைய மனைவி நித்யா பிரச்சனையும், இன்னொரு பக்கம் மகத்-யாஷிகா காதலும் சேர்ந்ததால் கடைசி சில நாட்கள் மட்டும் நிகழ்ச்சி பரபரப்புடன் சென்றது.

ஆனால் இந்த முறை ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சி பரபரப்புடன் செல்ல வேண்டும் என்பதை யோசித்து நிகழ்ச்சி தயாரிப்பு குழுவினர் செயல்பட்டிருப்பது போல் தெரிகிறது. இந்த முறை இரண்டு ஈழத்தமிழர்கள் போட்டியாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பதும் இதன் ஒரு பகுதியாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ஈழத்தமிழர்கள் இருப்பதால் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்களுடைய ஆதரவை பெறுவது மட்டுமின்றி இந்த இருவர் மூலம் ஈழத்தில் நடந்த கொடுமைகளை கூறுவதன் மூலம் அனுதாபத்தையும் பெற வைப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் நோக்கமக இருக்கலாம் என கருதப்படுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் இந்த முறை இருவரில் ஒரு ஈழத்தமிழர் பிக்பாஸ் பட்டத்தை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே எண்ண தோன்றுகிறது. அதற்கு அறிகுறியாக நேற்றைய முதல் நாளே ஈழத்தமிழ்ப்பெண் லொஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

யானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண்: வைரல் வீடியோ

கேமிரா செல்போன் அறிமுகமான நாளில் இருந்து செல்பி என்ற வியாதி பலரிடம் தொற்றிக்கொண்டது. விளையாட்டாக எடுக்கும் செல்பிகள் சிலசமயம் விபரீதமாக

முதல் நாளிலே ஆட்டம், பாட்டம், முத்தம், ரத்தம் ரணகளத்துடன் தொடங்கும் பிக்பாஸ்

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒரு வாரம் கழித்தே சூடு பிடிக்கும். ஆரம்பத்தில் நண்பர்களாக இருக்கும் போட்டியாளர்கள் ஒருவாரம் கழித்தே குரூப்பாக பிரிவது,

முதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி! யாருக்கு தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி ஓவியம் அகற்றமா? பிரேம்ஜியின் மாஸ் பதில்!

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருசில பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பிக்பாஸ் வீட்டை சுற்றிப்பார்த்த பத்திரிகையாளர்கள்,

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் பட்டியல் இதோ:

விஜய் டிவியில் நேற்று முதல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தனது வீட்டில் தன்னுடைய சிறுவயது அனுபவங்களுடன் தொடங்கி வைத்தார்.