close
Choose your channels

மணமகள் இல்லாமல் ஒரு திருமணம்: ஒரு தந்தையின் நெகிழ்ச்சி முடிவு!

Monday, May 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு அவரது தந்தை மணமகளே இல்லாமல் திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது.

குஜராத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய அஜய் என்பவர் தனது சகோதரன் திருமணம் மற்றும் உறவினர்களின் திருமணத்தை பார்த்து தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி தனது தந்தையிடம் வேண்டுகோள் வைத்தார். திருமணம் என்பது மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவது என்பதை அறியாத அஜய், தடபுடல் விருந்து, குதிரை வண்டியில் செல்வது, ஆடம்பரமான உடை ஆகியவைதான் திருமணம் என்று அவர் நினைத்துள்ளார்.

எனவே அஜய்யின் திருமண ஆசையை நிறைவேற்றி வைக்கும் வகையில் அவரது தந்தை மணகள் இல்லாமலே திருமணத்தை நடத்த முடிவு செய்தார். குஜராத்தி முறைப்படி அஜய்யை குதிரையில் ஊர்வலமாக பேண்டு வாத்தியங்களுடன் அழைத்து செல்தல் உள்பட ஒரு அசல் திருமணம் எந்த அளவுக்கு ஆடம்பரமாக நடைபெறுமோ, அதே அளவில் தனது மகனின் திருமணத்தை லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தினார்.

இந்த திருமணம் குறித்து ஒருசிலர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நிலையில் அஜய்யின் தந்தை இந்த திருமணம் குறித்து கூறியபோது, 'இந்த திருமணம் குறித்து சமூகம் என்ன சொல்லும் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் என் மகனின் கனவை நிறைவேற்றி உள்ளேன்' என்று திருப்தியுடன் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.