இது என்ன 3 மணி நேர திரைப்படமா? கமல்ஹாசனுக்கு அமைச்சர் கேள்வி

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

கடந்த 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கி அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் முழுவதையும் சேதப்படுத்தியது. ஒருபக்கம் அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணங்கள் வழங்கி வருவதாக கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் அரசின் நிவாரணப்பணி மந்தமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன.

அரசியல்வாதிகள் மாற்றி மாற்றி கஜா புயலை அரசியலாக்கி கொண்டிருக்கும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரண்டுமுறை டெல்டா பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு ஏற்பட்டிருக்கும் சேதங்களை பார்வையிட்டார். நேற்று தனது டுவிட்டரில் இப்போது செய்யப்பட்டிருக்கும் உதவிகள் வெறும் முதலுதவி தான் என்றும் முழு உதவிகள் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கின்றது என்றும் அதிவிரைவில் அதனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பதில் கூறிய அமைச்சர் உதயகுமார், 'கமல்ஹாசனுக்கு அனுபவம் கிடையாது. 3 மணிநேர திரைப்படம் போலவே உடனடியாக கிளைமேக்ஸ் காட்சி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார். நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

 

More News

சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை: இயக்குனர் ரஞ்சித்

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ரஞ்சித், 2வது படமான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் காலமானார்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 94

ஜீவா-அருள்நிதி இணையும் புதிய படத்தில் பிரபல நாயகி

கோலிவுட் திரையுலகில் இரண்டு ஹீரோக்கள் படங்கள் அரிதாகவே வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இளம் நாயகர்களான ஜீவா மற்றும் அருள்நிதி ஒரே படத்தில் இணையவுள்ளனர்.

நல்ல சோறு போட்டவர்களுக்கு புழுத்து போன அரிசியா? கமல் காட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட நடிகர், அரசியல்வாதி கமல் நேற்று இரண்டாம் முறையாக டெல்டா பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

'நீங்க அடுத்த சி.எம்-க்கு வண்டி ஓட்றீங்க: கமல் சென்ற பேருந்தில் கலகல...

மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரண்டாவது முறையாக டெல்டா பகுதிகளுக்கு நேரில் சென்று கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார்