இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான்: செல்வராகவன்

’துள்ளுவதோ இளமை’ முதல் ’என்ஜிகே’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் செல்வராகவன் அவர்கள் ஏற்கனவே இயக்கி முடித்துள்ள ’நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ’மன்னவன் வந்தானடி’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் விரைவில் ’புதுப்பேட்டை 2’ திரைப்படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் அவ்வப்போது சமூக மற்றும் அர்த்தமுள்ள கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வரும் செல்வராகவன், சற்று முன்னர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; இருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக் கொண்டே வாழ்வதுதான். அது நிம்மதியை அடியோடு ஒழித்து விடும். கடவுள் யாரையும் குறைத்துப் படைப்பதில்லை. நான் மிகச் சிறந்தவன் என்பதை எப்பொழுதும் நினைப்போம்’ என்று கூறியுள்ளார்.

மிக ஆழமான ஒரு கருத்தை அனைவரும் புரியும் வகையில் மிக எளிமையாக கூறிய செல்வராகவனுக்கு டுவிட்டர் பயனாளிகள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிம்மதியான வாழக்கைக்கு தேவையான மிகச் சிறந்த கருத்து என்றும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ’புதுப்பேட்டை 2’ மற்றும் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய படங்களுக்காக காத்திருப்பதாகவும் ரசிகர்கள் பலர் அவருடைய டுவீட்டுக்கு கமெண்ட் அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

4 மண்டலங்களில் 1000க்கும் மேல், 2000ஐ நெருங்கும் ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்

சென்னையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குவதால்

நான் யாரையும் ஏமாத்தலை, பெண்களாகத்தான் என்னிடம் வந்து விழுந்தாங்க: காசியின் பகீர் வாக்குமூலம்

தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் என் உடம்பு பெண்களுக்கு பிடித்திருந்ததால் அவர்களாகவே என்னிடம் வந்து விழுந்தார்கள் என்றும் அதனால் நான் அவர்களுடன் ஜாலியாக இருந்தேன்

'கார்த்திக் டயல் செய்த எண்': சிம்பு, கவுதம் மேனனின் புதிய வீடியோ வைரல்

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

நிபந்தனைகளுடன் சலூன் கடைகள் திறக்க அனுமதி: வழக்கம்போல் சென்னை தவிர...

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் கடந்த இரண்டு மாதங்களாக சலூன் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில்

தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் விமானம்!!!

பாகிஸ்தானின் தெற்கு பகுதியான கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் விழுந்து நொறுங்கியது.