செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்… சுவாரசியத் தகவல்!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

வம்சம் திரைப்படத்தில் கதாநாயகன் அருள்நிதி முதற்கொண்டு அனைவரும் செல்போன் சிக்னலுக்காக மரத்தில் ஏறி நின்று பேசும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். அப்படி ஒரு செயலை ஒரு அமைச்சர் செய்து இருந்தால்? உண்மையில் இப்படியொரு சுவாரசியச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்து இருக்கும் பாஜக அமைச்சரவையில் பொதுச் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். இவர் கடந்த சில தினங்களாக அசோக்நகர் மாவட்டம் அம்கோ கிராமத்தில் தங்கி வருகிறார். அங்கு நடக்கும் பொருங்காட்சி ஒன்றில் பாகவத் கதா பாராயாமண நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அந்த கிராமம் முழுக்கவே செல்போன் டவர் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. இதனால் செல்போன் சிக்னலுக்காக அமைச்சர் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த 50 அடி உயர ராட்டினத்தில் ஏறி பேசிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரஜேந்திர சிங், செல்போன் டவர் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி நின்று பேசினேன். இக்கிராமத்தில் உள்ள குறைகளை பொதுமக்கள் என்னிடம் கூறி வருகின்றனர். விரைவில் அனைத்தும் சரி செய்து தரப்படும் எனக் கூறி இருக்கிறார். இந்நிலையில் அமைச்சர் ஒருவர் செல்போன் டவருக்காக ராட்டினத்தில் ஏறிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

ஓடும் ரயிலுக்கு அடியில் படுத்து, நூலிழையில் உயிர் பிழைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ!

ஹரியாணா மாநிலத்தில் தண்டவளாத்தை கடக்க முயன்ற பெண் ஒருவர் திடீரென வந்துவிட்ட ரயிலைப் பார்த்து அதிச்சி அடைந்து தண்டவாளத்திலேயே நின்று இருக்கிறார்.

எம்.ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் பட டைட்டில் அறிவிப்பு: இன்று மாலை மீண்டும் ஒரு அப்டேட்!

ஜீவா நடித்த 'சிவா மனசுல சக்தி' ஆர்யா நடித்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' உதயநிதி நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் எம் ராஜேஷ்

பிக்பாஸ் சீசன் 3 பிரபலத்தை காதலிக்கின்றாரா 'வாணி ராணி' சீரியல் நடிகை?

ராதிகாவின் 'வாணி ராணி' என்ற சீரியலில் நடித்த பிரபல நடிகை ஒருவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலத்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என் அம்மா என்னை திட்டியது சரிதான்: ஷிவானியின் மனம் திறந்த பேட்டி!

என்னுடைய அம்மா என்னை திட்டியது சரிதான் என்றும் அந்த அளவிற்கு நான் அவருடைய மனதை புண்படுத்தி இருந்தேன் என்றும் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் மனம் திறந்து கூறியுள்ளார் 

நீண்ட இடைவெளிக்கு பின் பிக்பாஸ் சுரேஷ் நடிக்கும் படம்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து கொண்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். ஆரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் ஏற்கனவே திரைப்படங்களில் நடிக்க