காதலுக்கு பாலினம் தெரியாது… வரலாற்றை மாற்றிய ஓரினச்சேர்க்கை ஜோடி!

  • IndiaGlitz, [Tuesday,January 18 2022]

காதலுக்கு பாலினம் தேவையே இல்லை, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக இணைந்து இந்தச் சமூகத்தில் வாழ உரிமையுண்டு என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்தியாவில் ஒரு ஜோடி வரலாற்றில் கால்தடம் பதித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த பெண் மருத்துவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் டாக்டர் சுர்பி மித்ரா. இருவரும் ஒருபாலின விரும்பிகள். அதோடு இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கவும் துவங்கியுள்ளனர். இதனால் வெளிப்படையாக திருமணம் செய்துகொண்டு வாழ்வது என முடிவெடுத்து தங்களுடைய முடிவை தற்போது அறிவித்து இருக்கின்றனர்.

இந்தியச் சட்டப்படி ஒரு பாலினச் சேர்க்கையாளர் இருவர் திருமணம் செய்துகொண்டு வாழ்வதற்கு உரிமையுண்டு என்றாலும் சமூகத்தில் இன்றைக்கும் இதுபோன்ற ஜோடிகளை அநாகரிகமாகப் பார்க்கும் மனோபாவம் இருந்து வருகிறது. மேலும் பெற்றோர்கள் இத்தகைய திருமணத்தைப் பெரும்பாலும் விரும்புவதே இல்லை. இத்தகைய தடைகளை உடைத்து இந்த ஜோடி தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கோவாவில் இந்த ஜோடிகளின் திருமணம் இந்த மாதம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் மோதிரம் மாற்றிக்கொண்டு இந்த ஜோடி தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளத் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தங்களது திருமணம் குறித்துப் பேசிய டாக்டர் பரோமிதா இது வாழ்நாள் அர்ப்பணிப்பு. நாங்கள் இரண்டு மனைவிகள். கணவன் தேவையில்லை, ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாக வேண்டும் எனக் கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

விண்ணிற்கு செல்கிறது இசைஞானி இளையராஜாவின் பாடல்!

இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவரது மெலடி பாடல்களை கேட்டு மயங்காத மனிதர்களே உலகில் இல்லை என்றும் சொல்லலாம்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் பிரியங்கா இரண்டாவது இடத்தை பெற்றார் என்பதும் தெரிந்தது 

விவாகரத்து செய்யும் முன் யோசியுங்கள், அது மரணத்தை விட கொடுமையானது: பிரபல நடிகர்

காதலித்து கைப்பிடித்த மனைவியை விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என பிரபல நடிகர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகையை கைது செய்ய தடை: இடைக்கால உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்!

பிரபல நடிகையை கைது செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சமந்தா தான் எனக்கு சரியான ஜோடி: நாக சைதன்யா

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா கடந்த சில மாதங்களுக்கு முன் தங்களுடைய விவாகரத்து அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்ட நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா தனக்கு சரியான ஜோடி