close
Choose your channels

திருவள்ளூரில் ஒரு ரியல் 'சாட்டை' சமுத்திரக்கனி: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Friday, June 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமுத்திரக்கனி நடித்து இயக்கிய 'சாட்டை' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை போல் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக பணிமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று திருவள்ளூர் அருகே நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், வெளியகரம் என்ற பகுதியியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆங்கில ஆசிரியர் பகவான் என்பவரை மாவட்ட கல்வித்துறை இடமாற்றம் செய்தது. இதுவொரு வழக்கமான இடமாற்றம்தான் என்றாலும் அந்த ஆசிரியர் மீது அளவுக்கதிகமான அன்பும் பாசமும் வைத்திருந்த அந்த பள்ளி மாணவர், மாணவியர் இந்த பள்ளியை விட்டு செல்லக்கூடாது என்று ஆசிரியர் பகவானிடம் கதறி அழுதனர். இதனால் இடமாற்றல் உத்தரவை பெற வந்த ஆசிரியர் நெகிழ்ச்சியால் கண்கலங்கினார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியை அறிந்த மாவட்ட கல்வி அலுவலகம் பள்ளி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை செய்து ஆசிரியர் பகவானின் இடமாறுதல் உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது.

எனவே ஆசிரியர் பகவான் வழக்கம்போல் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தொடர்கிறார். இது அந்த பள்ளி மாணவ, மாணவியர்களின் பாசப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஆசிரியர் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று ஆசிரியர் பகவானுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.