close
Choose your channels

ரித்விகாவுடன் மோதும் ஐஸ்வர்யா? இந்த வாரமாவது மக்கள் சுதாரிப்பார்களா?

Monday, September 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் செண்ட்ராயன் வெளியேறியது கமல்ஹாசனுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் மிகுந்த மனவருத்தத்தை கொடுத்தது. பிக்பாஸ் வீட்டில் நீடிக்க தகுதி இல்லாத ஒருசிலர் இருக்கும் நிலையில் டைட்டில் வெல்லும் அனைத்து தகுதிகளும் உடைய செண்ட்ராயன் வெளியேறியது யாருக்கும் உடன்பாடு இல்லை.

இந்த நிலையில் இந்த வாரம் நேரடியாக ரித்விகா மட்டுமே நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரது நாமினேஷனுக்கு காரணமான மும்தாஜ் மீது சக போட்டியாளர்கள் ஆத்திரத்தில் இருப்பதால் மும்தாஜ் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் இந்த வாரம் ஐஸ்வர்யாவும் நாமினேஷனில் இருக்க வேண்டும் என தனது ஆசை என கமல் தெரிவித்தார். நேற்று செண்ட்ராயன் வெளியேற்றப்படவுள்ளார் என்பதை கமல் கூறியபோது ஐஸ்வர்யா ஏதோ சொல்ல வந்தார். ஆனால் கமல், ஐஸ்வர்யாவை தடுத்து நிறுத்தி 'உட்காருங்கள்' என்று கோபமாக கூறிவிட்டார். கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் ஐஸ்வர்யா வெளியேற வேண்டும் என்ற எண்ணமே உள்ளது.

கமல் வேண்டுகோளை ஏற்று ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டால் அவரை வெளியேற்ற மக்கள் தயாராகத்தான் உள்ளனர். ஆனால் பிக்பாஸ் கலர் கலராக ஒரு கிராஃபை காட்டி மீண்டும் ஒரு விளக்கத்தை கமல் மூலம் கூற வைத்து ஐஸ்வர்யாவை காப்பாற்றிவிடுவார் என்றே எண்ண தோன்றுகிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் நினைத்தவர்கள் வெளியேறவில்லை என்பதே உண்மை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.