'தூங்காவனம்' இயக்குனரின் அடுத்த படத்தில் மணிரத்னம் பட நாயகி.. 2 மொழிகளில் உருவாகிறதா?


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசன் நடித்த ’தூங்காவனம்’ திரைப்படத்தின் இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் மணிரத்னம் படத்தில் நடித்த நடிகை முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடித்த ’தூங்காவனம்’, விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ சரத்குமார் நடித்த ’இறை’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜேஷ் செல்வா. இவர் தற்போது தனது அடுத்த படத்திற்கு தயாராகி வரும் நிலையில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த படத்தில் மணிரத்னம் இயக்கிய ’காற்று வெளியிடை’, ‘செக்கச் சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அதிதிராவ் ஹைத்ரி நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments