தமிழ்ப்பட நாயகி கடத்தப்பட்டாரா? நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

  • IndiaGlitz, [Saturday,July 27 2019]

தமிழ் படம் ஒன்றில் நாயகியாக நடித்த ஒருவர் கடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள 'தொரட்டி' என்ற படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் நடிகை சத்தியகலா. இவர் படப்பிடிப்பின்போதே தன்னுடைய தந்தைக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் தான் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், தனது விருப்பமின்றி தனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் படக்குழுவினர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை சத்தியகலா இருந்த வீடு தற்போது காலியாகவுள்ளது. அவரை செல்போன் மூலமும் தொடர்பு கொள்ளவில்லை. எனவே சத்தியகலாவை அவரது பெற்றோரே கடத்தியிருக்கலாம் என்றும், அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் 'தொரட்டி' படக்குழுவினர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு வரும் திங்களன்று விசாரணைக்கு வரவுள்ளது.