close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்திற்கு கரெக்டான கலை இயக்குனரை பிடித்த மணிரத்னம்!

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' நாவலை ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் காட்சியாக கொண்டு வருவது ஒரு சவாலான விஷயம். வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், குந்தவை, நந்தினி, உள்பட பல கேரக்டர்களை இந்த நாவலை படித்த கோடிக்கணக்கான வாசகர்கள் ஒரு கம்பீர நோக்கில் கற்பனையாக மனதிற்குள் வடிவமைத்து வைத்திருப்பார்கள். குறைந்தபட்சம் அதில் பாதியையாவது திரையில் கொண்டு வரவேண்டும்.

அதேபோல் இந்த நாவலில் உள்ள அடுத்த சவாலான விஷயம் செட். இதற்காக இந்த நாவலின் நுணுக்கம் தெரிந்த ஒரு அனுபவமுள்ள கலை இயக்குனர் தேவை. கலை இயக்குனர் இந்த படத்தின் முதுகெலும்பு போன்றவர் என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் மணிரத்னம் அதற்காக தற்போது தோட்டாதரணியை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் வாசகர்களை தோட்டாதரணி தனது நுணுக்கமான, பிரமாண்டமான கலையில் திருப்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.