கொத்துக் கொத்தாக செத்து மடியும் சீல்கள்… அதிர்ச்சியில் விலங்குநல ஆர்வலர்கள்!!!

  • IndiaGlitz, [Monday,October 26 2020]

நமீபியா கடற்கரை பகுதியில் இதுவரை 7,000 சீல்கள் செத்து மடிந்து, கரை ஒதுங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான காரணத்தைக் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் மேலும் அதிர்ச்சியான சில கருத்துகளை தெரிவித்து உள்ளனர். நமீபியாவின் வெல்விஸ் வளைகுடா பகுதி அடுத்த பெலிகன் பாயிண்ட் கடற்கரையில் அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் சில சீல்கள் இறந்து கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு அடுத்த வாரமும் சில சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கிய நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக 7,000 சீல்கள் உயிரிழந்து கரை ஒதுங்கி இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இப்படி சீல்கள் உயிரிழப்பதற்கான காரணத்தை ஆராய்ந்த ஒசியன் கன்சர்வேசன் அமைப்பினர் சீல்கள் விரும்பி உண்ணும் மீன் வகைகள் ஆண்டுதோறும் தொடர்ந்து இடப்பெயர்ச்சியை மேற்கொள்கின்றன.

மீன்கள் இடப்பெயர்ச்சி நேரத்தில் சீல்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை. இதனால் சீல் உயிரினம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சமயத்தில் இப்படி சீல்கள் ஒட்டுமொத்தமாக உயிரிழந்து ஒரு இடத்தில் கரை ஒதுங்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டனர். உணவுச் சங்கிலியில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்புதான் என்றாலும் இச்சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை - பெங்களூர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

வானம் என்ன அவன் அப்ப வீட்டு சொத்தா? இறக்குடா பிளைட்டா? சூரரை போற்று டிரைலர்

'சூரரைப்போற்று' திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தடையில்லா சான்றிதழ் தாமதமாக வந்ததால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது 

நம் மனதில் எப்போதும் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள்: சாக்சி தோனியின் நெகிழ்ச்சியான பதிவு

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது.

செய்தி வாசிப்பில் அனிதா செய்த தவறு: திருத்திய ரியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி தொடங்கி தற்போது 20 நாட்களில் முடிந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசன் மட்டும் ஒரு வித்தியாசமான சீசனாகவும்,

போதைப்பொருள் விவகாரம்: பிரபல டிவி நடிகை கைது!

கடந்த சில நாட்களாக பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும்