சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் விபத்தில் பலி!

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]

இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு பேருக்கு மேல் கூடக்கூடாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் 144 தடை உத்தரவு ஆரம்பிப்பதற்கு முன்னரே சொந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறினர். ஏற்கனவே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல இருந்த ஒரே வழி பேருந்து மட்டும்தான். எனவே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடினர். ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் தள்ளி நிற்க வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தல் காற்றில் பறக்கவிடப்பட்டு சொந்த ஊருக்கு பேருந்து செல்வதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்ததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் பேருந்து கிடைக்காததால் பைக்கிலேயே சொந்த ஊருக்கு செல்ல முயன்ற மூவர் பரிதாபமாக விபத்தில் பலியான சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒசூரிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு பைக்கில் இருவர் சென்ற நிலையில் அவர்கள் சென்ற பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே இருவரும் மரணம் அடைந்தனர். அதேபோல் சென்னையிலிருந்து மதுரைக்கு பைக்கில் சென்ற உதவி இயக்குனர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

More News

கொரோனாவுக்கு “லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது“- WHO அறிவுறுத்தல்

“ஊரடங்கு எனப்படும் லாக்டவுனை மட்டும் அறிவித்துவிடுவது கொரோனா பரவலுக்கு முழுமையான தீர்வாகாது“ என உலக சுகாதார அமைப்பின் அவசரகால

ஆண்டவனே உங்க பக்கம்தான்: ரஜினியை வாழ்த்திய மூன்று பிரபலங்கள்

உலகமே கொரோனா அச்சுறுத்தலில் பரபரப்பாக இருந்தாலும் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சி டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பப்பட்ட போது

மதுரை நபரை மர்மமாக தாக்கிய கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல்

உலகிலுள்ள மனித இனத்தையே கடந்த சில மாதங்களாக ஆட்டுவித்து வரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது 

சூர்யாவை அடுத்து பெப்சி தொழிலாளர்களுக்கு உதவிய பிரபல நடிகர்

கொரோனா காரணமாக வேலையின்றி, வருமானம் இன்றி இருக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்காக நடிகர், நடிகைகள் உதவ  வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணிவின் கோரிக்கையை

கச்சா எண்ணெய் வீழ்ச்சி!!! அரபுநாடுகள் – ரஷ்யா முட்டிக்கொண்ட கதை!!!

மார்ச் 6 ஆம் தேதி வியன்னாவில் நடைபெற்ற ஒபேக் கூட்டமைப்பு நாடுகள் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்கிடையிலான கருத்தரங்கு நடைபெற்றது.