ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

  • IndiaGlitz, [Thursday,March 14 2019]

திருச்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

திருச்சியை சேர்ந்த 43 வயது சகாயராஜ் என்ற ஆட்டோ டிரைவருக்கு மனைவியும், முத்துலட்சுமி என்ற 25 வயது மகளும் உள்ளனர். இவர்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் வீட்டு உரிமையாளர் வாடகை வாங்க வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் ஜன்னல் வழியே பார்த்தபோது மூவரும் மூன்று சேலைகளில் தூக்கில் தொங்கியபடி மரணம் அடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக கதவை உடைத்து மூன்று பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் சகாயராஜூக்கு ஒரு மகன் இருந்ததாகவும், சமீபத்தில் அவர் மரணம் அடைந்ததால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், மகனை பிரிந்த வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் சகாயராஜ் மரணத்திற்கு முன் எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் மீட்டுள்ளனர். அந்த கடிதத்தில் தங்களுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

ஜூலியின் ஆவேச வீடியோவுக்கு ஆறுதல் கூறிய காயத்ரி

சமீபத்தில் பிக்பாஸ் ஜூலியும் அவருடைய ஆண் நண்பர்களும் காவல்துறை ஏட்டு ஒருவரை தாக்கியதாக வெளிவந்த செய்தி பரபரப்பு அடைந்தது.

பெண்ணின் வெற்றுடல் ஆபாசமானதல்ல: பொள்ளாச்சி விவகாரம் குறித்து நடிகர் சூர்யா

பொள்ளாச்சி விவகாரம் குறித்து கோலிவுட் திரையுலகினர் பலர் தங்கள் ஆத்திரத்தை கொட்டி தீர்த்த நிலையில் நடிகர் சூர்யா, ஒரு ஆராய்ச்சி கட்டுரை போன்று ஒரு நீண்ட அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

நேர்கொண்ட் பார்வை: வித்யாபாலன் படப்பிடிப்பு குறித்த தகவல்

தல அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக இடைவெளியின்றி நடைபெற்று வருவது தெரிந்ததே

விரைவில் வெளியாகும் ரஜினி படத்தின் டிரைலர் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன நிலையில் விரைவில் அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரதமர் மோடியின் டுவீட்டுக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் ஒரு வேண்டுகோளை விடுத்தார். நாட்டில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க உதவ வேண்டும்