close
Choose your channels

சென்னை ஸ்டார் ஹோட்டலில் விற்பனை செய்ய முயன்ற புரோக்கர்கள்: அதிர்ச்சி தகவல் 

Thursday, February 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் உள்ள முக்கிய ஸ்டார் ஓட்டல் ஒன்றை மூன்று புரோக்கர்கள் கேரள தொழிலதிபர் ஒருவருக்கு விற்பனை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வடபழனி கோயம்பேடு சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மூன்று புரோக்கர்கள் அறை எடுத்து தங்கி இருந்தார்கள். இவர்கள் மூவரும் கேரள தொழில் அதிபர் ஒருவரை வரவழைத்து இந்த ஸ்டார் ஹோட்டல் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் இதனை ரூ.165 கோடிக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனை நம்பிய அந்த தொழிலதிபரும் இதற்கு சம்மதம் தெரிவித்து ஹோட்டலை சுற்றிப் பார்த்துள்ளார்.

அப்போது அந்த ஓட்டலின் மேனேஜர் சந்தேகமடைந்து இதுகுறித்து விசாரித்தபோது இந்த ஸ்டார் ஓட்டலை தான் ரூ.165 கோடிக்கு வாங்க போவதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஓட்டலின் மேனேஜர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது அந்த ஓட்டலில் தங்கியிருந்த மூன்று புரோக்கர்கள் அந்த ஓட்டலை முறைகேடாக விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது இதனையடுத்து 3 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

கருணாகரன், பரமானந்தன் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகிய மூன்று புரோக்கர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புரோக்கர்கள் ஏற்கனவே பல இடங்களில் இதேபோல் அடுத்தவருக்கு சொந்தமான கட்டடங்களை விற்பனை செய்து உள்ளதாக விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.