'வாரிசு' படத்தை தான் முதலில் பார்ப்பேன்.. எச்.வினோத் கூறிய ஆச்சரியமான காரணம்!

விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ’துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் விஜய் ஆகிய இருவருக்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அந்தந்த ரசிகர்கள் ’வாரிசு’ மற்றும் ’துணிவு’ படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பார்கள். ஆனால் நடுநிலை ரசிகர்கள் முதலில் எந்த படத்தை பார்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இந்த நிலையில் பல பிரபலங்களிடம், வாரிசு, ’வாரிசு’ ஆகிய இரண்டு படங்களில் எந்தப் படத்தை பார்ப்பீர்கள் முதலில் பார்ப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. அந்த கேள்வியால் பல பிரபலங்கள் தர்மசங்கடத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ’துணிவு’ படத்தின் இயக்குனர் எச்.வினோத்திடம் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது அவர் சற்றும் தயங்காமல் ஒரு ஆச்சரியமான பதிலைக் கூறினார். விஜய்யின் ’வாரிசு’ படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்றும் ஏனெனில் ஒரு இயக்குனராக 'துணிவு’ படத்தை நான் ஏற்கனவே பல முறை பார்த்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

எனவே விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியின் போது சென்னையில் உள்ள ஏதாவது ஒரு திரையரங்கில் எச்.வினோத்தை ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

More News

சொர்க்கத்தில் இருக்கும் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாடகி சித்ரா.. நெகிழ்ச்சியான பதிவு!

 பிரபல பின்னணி பாடகி சித்ரா, சொர்க்கத்தில் இருக்கும் தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவு செய்த இன்ஸ்டகிரம் போஸ்ட் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' படத்தில் இணைந்த சூப்பர்ஹிட் பட நடிகை!

பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் யோகிபாபு

'துணிவு' படத்தின் சூப்பர் அப்டேட் தந்த போனிகபூர்.. அஜித் ரசிகர்கள் குஷி!

அஜித் நடிப்பில், எச்வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது எ

சேலம் விவசாயிக்கு பொருத்தப்பட்ட மதுரை நபரின் இதயம்!

சேலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவருக்கு மதுரையில் மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவரின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. 

ஆபத்து.. இன்றே கடைசி.. உடனே செயல்படுங்கள்: கமல்ஹாசன்

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு ஆபத்து என்றும் இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இன்று கடைசி தினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்