close
Choose your channels

படிக்க சென்ற இடத்தில் தகாத உறவு: போராட்டத்தில் குதித்த டிக்டாக் பிரபலம்

Sunday, August 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது சகோதரியின் கணவர் படிக்க சென்ற இடத்தில் தகாத உறவு வைத்திருந்த காரணத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் எஸ்பி அலுவலகம் முன் திடீரென டிக் டாக் பிரபலம் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிக் டாக் மூலம் பிரபலமாகி சமூக சேவை செய்து வருபவர் லியோ தர்மராஜ். இவருடைய சகோதரி திவ்யா என்பவருக்கும் ராஜேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் திவ்யாவின் கணவர் ராஜேஸ்வரன் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்காக மதுரைக்குச் சென்றார்.

அங்கு இன்னொருவரின் மனைவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை அடுத்து இருவரும் ஒன்றாக வாழ தொடங்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த திவ்யா தனது தனது கணவனை தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை நடந்தது. அதுமட்டுமின்றி திவ்யாவின் கணவர் ராஜேஸ்வரன் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் லியோ தர்மராஜ் தனது சகோதரி மற்றும் குடும்பத்தினரை அழைத்து கொண்டு திண்டுக்கல் எஸ்பி அலுவலகத்தில் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். தனது சகோதரி கணவர் ராஜேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தனது சகோதரிக்கு நீதி வழங்க வேண்டுமென்றும் அவர் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியதால் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே லியோ தர்மராஜ் தனது போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.