பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்ட 'டிக்டாக்' பிரபலம்

  • IndiaGlitz, [Wednesday,May 22 2019]

டெல்லியில் டிக்டாக் பிரபலமும் ஜிம் பயிற்சியாளருமான 27 வயது இளைஞர் ஒருவர் மூன்று பேர் கும்பலால் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டிக்டாக் தளத்தில் ஜிம் பயிற்சிகள் குறித்த வீடியோவை பதிவிட்டு பிரபலமானவர் மோஹித் மோர். இவரது டிக்டாக் பக்கத்தை ஐந்து லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். அதேபோல் இவர் இன்ஸ்டாகிராமிலும் தன்னுடைய வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

இந்த நிலையில் மோஹித் மோர் தனது வீட்டின் அருகில் உள்ள நண்பரின் கடைக்கு சென்று அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட அந்த கடைக்குள் நுழைந்து மோஹித் மோரை சரமாரியாக சுட்டனர். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த மோஹித்தை அவரது நண்பர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது. அவரது உடலில் ஏழு குண்டுகள் பாய்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

More News

த்ரிஷாவின் 'ராங்கி' படம் குறித்த முக்கிய அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பேட்ட', மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் '96' என தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'ராங்கி'

ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் நாயகியாகும் பிரபல பாலிவுட் நடிகை

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள 'கோமாளி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகிவிட்டது.

22 கேமிரா வைத்து உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை பிளந்த மனைவி!

தன்மீது சந்தேகப்பட்டு கேமிராக்கள், தனியார் துப்பறியும் நிறுவனம் ஆகியவற்றின் மூலம் உளவு பார்த்த கணவரை கிரிக்கெட் பேட்டால் மண்டையை உடைத்த மனைவி குறித்த பரபரப்பான செய்தி வெளிவந்துள்ளது

த்ரில் படத்தை உருவாக்கும் புதிய டீமுக்கு கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்து

கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த 'அட்டு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ரிஷிரித்விக். இவர் நடிக்கவுள்ள

ஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை! கோடீஸ்வர தம்பதிகளின் கொடூர முடிவு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு போதை ஒரு கோடீஸ்வர தம்பதிகளின் உயிரை பறித்துள்ள சோக சம்பவம் மதுரை அருகே நடந்துள்ளது.