close
Choose your channels

ஒரு பெண்ணுக்காக மோதிய இரண்டு கோஷ்டிகள்: நண்பனையே கொலை செய்து புதைத்த கும்பல்

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடலூர் அருகே டிக்டாக் வலையில் சிக்கிய இளைஞரை அவரது நண்பர்களே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் அருகே உள்ள சிவானந்தபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். 18 வயதான இவர் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது நண்பர்களுடன் சுற்றி வந்துள்ளார். கடந்த 4ஆம் தேதி வீட்டை விட்டு சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது நண்பர்கள் மீது சந்தேகம் வலுத்தது. 

ஜோசபின் செல்போனை ஆய்வு செய்ததில் அவரது நண்பர்கள் 2 பேரிடம் கடைசியாக அவர் பேசியது தெரிய வந்தது. இதனை அடுத்து விஜய் மற்றும் பிரபாகர் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாயமானதாக கூறப்படும் ஜோசப் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பேசி பழகுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினைகள் இருந்துள்ளது, இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. இந்த அடிதடி சம்பவத்தை தனது செல்போனில் பதிவு செய்து அதை டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார் ஜோசப். இந்த வீடியோ பயங்கர வைரலானது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் ஜோசப்பை கடந்த 4ஆம் தேதி ஒரு ரகசிய இடத்திற்கு வரவழைத்து அவருக்கு மது அருந்தக் கொடுத்து, ஜோசப் போதையில் இருந்தபோது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து ஆற்றில் புதைத்துவிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இதனை கொலையாளிகள் விஜய் மற்றும் பிரபாகர் ஆகிய இரண்டு பேரும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து 13 நாட்கள் கழித்து கொலை செய்யப்பட்ட ஜோசப் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் ஜோசப் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த கொலையில் மேலும் 4 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. பெண் மற்றும் டிக்டாக் விவகாரத்தால் 18 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது கடலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.