கொரோனா நிவாரண நிதியாக மிகப்பெரிய தொகை கொடுத்த டிக்டாக்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக வழங்கி வருகின்றன என்பது தெரிந்ததே. இந்தியாவில் டாடா நிறுவனம் ரூபாய் 1500 கோடி கொரோனா தடுப்பு நிதியாக மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்டர்நெட் உபயோகிக்கும் மக்களிடம் மிக வேகமாக வளர்ந்த செயலிகளில் ஒன்று டிக்டாக். தமிழகம் உள்பட இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் மிக வேகமாக மக்களின் மனதை குறிப்பாக இளம்பெண்களை கவர்ந்த செயலி டிக்டாக் என்பதும், இளம்பெண்களின் டிக்டாக் வீடியோ உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிக்டாக் நிறுவனம் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக 375 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 2800 கோடி ரூபாய்க்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ ஒரு பில்லியன் டாலர் கொரோனா தடுப்பு நிதியாக கொடுத்துள்ள நிலையில் தற்போது டிக்டாக் நிறுவனம் 375 மில்லியன் டாலர் கொரோனா தடுப்பு நிதியாக கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்காவை நெருங்கும் புயல்: கொரோனாவைவிட பன்மடங்கு சேதமாக வாய்ப்பா?

உலகிலேயே கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருப்பது அமெரிக்கா தான். இந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்

பிரியாணி சாப்பிட அனுமதிக்காததால் மருத்துவமனை கண்ணாடியை உடைத்த கொரோனா நோயாளி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வந்த போதிலும் தமிழக அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து முடிந்தவரை கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது.

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா; மருத்துவமனையை சீல் வைக்க முடிவா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வரும் நிலையில் நேற்று மட்டும் தமிழகத்தில் 77 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது

5 லட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்: உச்சகட்டத்தை அடைந்தது அமெரிக்கா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

கமல் வீட்டில் பால்கனி இல்லையா? ரங்கராஜ் பாண்டே கேள்விக்கு ஸ்ரீப்ரியா பதிலடி

சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகன் நடிகருமான கமல்ஹாசன், திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது குறித்து பிரதமர் மோடியை விமர்சனம்