close
Choose your channels

மசாஜ் மையத்தில் பாலியல் தொழில்: போலீசாரிடம் சிக்கிய டிக் டாக் ரவுடி பேபி சூர்யா!

Wednesday, December 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக் டாக் மூலம் புகழ்பெற்ற சூர்யா என்ற பெண்ணை ரவுடிபேபி சூர்யா என்றே டிக்டாக்கில் உள்ளவர்கள் அழைப்பதுண்டு. டிக்டாக்கில் ஆபாச வசனங்கள், ஆபாச உடை அணிந்து ஆடும் நடனங்களால் இவர் புகழ் பெற்றார். தற்போது டிக்டாக் தடை செய்யப்பட்ட போதிலும் அவருடைய பழைய வீடியோக்கள் இன்னும் பல சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த் நிலையில் திருச்சி மாநகரில் மசாஜ் மையங்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து திருச்சியில் உள்ள ஒருசில மசாஜ் மையங்களில் அதிரடி சோதனை நடந்தது. இதில் ஒரு மசாஜ் மையத்தை ரவுடிபேபி சூர்யா நடத்தி வருவதாகவும், இந்த மையத்தில் பாலியல் தொழில் நடந்ததாகவும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து டிக் டாக் சூர்யா உள்பட 10க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் ரவுடிபேபி சூர்யா தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்றும், சம்பந்தப்பட்ட மசாஜ் மையத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மறுத்துள்ளதாக தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos