close
Choose your channels

திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் கொலை: டிக்டாக் ஸ்டாரின் வெறிச்செயல்

Tuesday, June 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் மணமகளை வெறித்தனமாக கொலை செய்த டிக்டாக் ஸ்டார் ஒருவரால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசிதாபாத் என்ற பகுதியைச் சேர்ந்த நயினா கெளர் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மணமகள் நயினா கெளர் திடீரென மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்

இதனையடுத்து போலீசார் அதிரடியாக இதுகுறித்து விசாரணை செய்த போது டிக்டாக்கில் பிரபலமான ஒருவர் தனது நண்பர்களுடன் வந்து இந்த கொலையை செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்

இது குறித்த விசாரணையில் மணமகள் நயினா கெளரை ஒருதலையாக டிக்டாக் ஸ்டார் காதலித்ததாகவும், இந்த காதலுக்கு நயினா கெளர் மறுப்பு தெரிவித்ததால் திருமணத்திற்கு முந்தைய நாள் அவரை பழிவாங்கும் வகையில் கொலை செய்ததும் தெரியவந்தது. திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் மணப்பெண் கொலை செய்யப்பட்டதால் இருவிட்டார்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos