டிக்டாக் பிரபலமான 16 வயது இளம்பெண் தற்கொலை: மிரட்டப்பட்டதாக புகார்

டெல்லியில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட டிக்டாக் பிரபலம் சியா கக்கர் தற்கொலை செய்துகொண்டது அவரது ரசிகர்களுக்கிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக்கில் லட்சக்கணக்கான ரசிகர்களுடன் மிகப் பிரபலமாக இருப்பவர் 16 வயது சியா கக்கர். டிக்டாக் மட்டுமின்றி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்களில் இவர் பிரபலம். டெல்லியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியான இவரது நடனத்திற்காக இவரை டிக்டாக்கில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டிக்டாக் பிரபலம் சியா கக்கர் திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த மூன்று மாதங்களாக பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்து, விதவிதமான நடனங்களை டிக்டாக் மூலம் பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரை தொலைபேசியில் சிலர் மிரட்டியதாகவும், இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் சியாவின் செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றார். அதுமட்டுமின்றி சியாவின் நெருங்கிய நண்பர்களையும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்
 

More News

பிரியாணி வாங்கித்தர மறுத்த கணவன், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவி தற்கொலை!

கணவர் பிரியாணி வாங்கித் தரவில்லை என்ற கோபத்தால் மனைவி தீவைத்து தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அவரு ஒரு தியாகி- பாகிஸ்தான் பிரதமர் கூறிய புதிய கருத்தால் வெடித்தது சர்ச்சை!!!

உலகிலேயே அதி பயங்கரவாதியாக அறியப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,

வீட்டுக் கொல்லையில் சுரங்கம் தோண்டிய இளைஞர்: ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆனார்!!!

ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த ஒரு ஏழை நாடு தான்சானியா. இந்நாட்டில் அதிகளவு கனிம வளங்கள் கிடைக்கின்றன.

டிவி பார்த்தால் குழந்தைகளின் உடல் பருமன் கூடுமா??? வெளியான அதிர்ச்சித் தகவல்!!!

சிறிய வயதில் குழந்தைகள் சற்று உருண்டு இருப்பதை பெரும்பலான பெற்றோர்கள் விரும்புகின்றனர்

விரைவில் புதிய இயக்கம்: சத்யராஜ்‌ மகள் திவ்யா அதிரடி முடிவு

திவ்யா சத்யராஜ்‌ ஒரு நன்கு அறியப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர்‌. உலகின்‌ மிக பெரிய மதிய உணவுத்‌ திட்டமான அக்ஷய பாத்ராவின்‌ விளம்பரத்‌ தூதுவர்‌. சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ துறையில்