39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்!

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

செஞ்சி பகுதியைச் சேர்ந்த கடல் கன்னி என்ற 39 வயது பெண் கணவரை இழந்தவர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். விவசாயத்துக்கு விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனது மூன்று குழந்தைகளுக்காக வேலை செய்து வாழ்ந்து வருகிறார்

இந்நிலையில் ஓய்வு நேரத்தில் இவர் டிக்டாக் வீடியோ பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஒருசில பெண்கள் போல் இல்லாமல் இவர் டிக்டாக்கில் நல்ல கருத்துக்களை கூறும் வழக்கத்தை உடையவராக இருந்துள்ளார். இதனால் இவருக்கு பாலோயர்கள் குவிந்தது குறுகிய காலத்தில் இவருக்கு 33 ஆயிரம் பாலோயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கடல்கன்னிக்கு மூன்று பெண்கள் டிக்டாக் மூலம் அறிமுகமானார்கள். அவர்கள் மூவரும் கடல்கன்னியிடம் மிகவும் நெருக்கமாகி ஒரு கட்டத்தில் தாங்கள் சொல்வதை கேட்டால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார்கள். கடல்கன்னியும் ஆசையுடன் அதுகுறித்து விவரமாக கேட்டபோதுதான் அது விபச்சாரம் என்று தெரியவந்தது

இதனை அடுத்து தனக்கு அதில் விருப்பமில்லை என்றும் அவ்வாறு வரும் பணம் தனக்கு தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூன்று பெண்கள் கடற்கன்னியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளனர்

இந்த ஆபாச புகைப்படத்தை பார்த்த கடல்கன்னியின் பாலோயர்கள் அதிர்ச்சி அடைந்து நீங்களா இப்படி? என கேள்வி எழுப்பினார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கடல்கன்னி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் அவருடைய புகாரை கண்டுகொள்ளாததால் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. தற்போது தான் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்

More News

குளித்து கொண்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ

டூவீலரில் செல்லும் இளைஞர்கள் பல்வேறு சாகசங்களை செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே

பிக்பாஸ் தர்ஷன் முதல் படம் குறித்த தகவல்: வைரலாகும் வீடியோ!

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

சீனா; கொரோனா வைரஸால் 80 பேர் உயிரிழப்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தொகுப்பு

சீனாவின் வுஹான் மகாணத்தில் இருந்து பரவிய  கொரோனா வகை வைரஸால் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்

கமல்ஹாசன் படத்தில் நடிக்க மறுத்தாரா கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்?

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு உலகப் கோப்பையை வென்றது

சைக்கோ படத்தில் சிசிடிவி ஏன் இல்லை? மிஷ்கின் ஆர்மியின் கிண்டல் பதிவு

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'சைக்கோ' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக