முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த பெண் எம்பி

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி எம்பிக்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. அசோக்குமார் மற்றும் நாமக்கல் தொகுதி எம்.பி. சுந்தரம் ஆகியோர் ஏற்கனவே ஆதரவு அளித்துள்ள நிலையில் திருப்பூர் தொகுதி பெண் எம்பி சத்தியபாமா அவர்களும் சற்று முன்னர் தனது ஆதரவை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஆதரவு ஓபிஎஸ் அவர்களுக்கு அதிகரித்து கொண்டே வருவதால் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுகிறார் ஓபிஎஸ் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

More News

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு சரத்குமார் ஆதரவு

தமிழக முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் அணி வெற்றி எண்ணிக்கையை நோக்கி வீறுநடை போட்டு வருகிறது

துரோகி அணியில் பாண்டியராஜன். சி.ஆர்.சரஸ்வதி ஆவேசம்

அதிமுகவின் மூத்த அமைச்சர்கள், முன்னணி நிர்வாகிகளே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவரது ஆதரவாளர்களாக மாறி வருகின்றனர்

ஆட்சி அமைக்கும் எண்ணிக்கையை நெருங்கியது ஓபிஎஸ் அணி. மேலும் 30 எம்.எல்.ஏக்கள் ஆதரவு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சமீபத்தில் மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தன்னந்தனியாக தொடங்கிய போராட்டம் தற்போது ஆச்சரியப்படும் வகையில் வலுபெற்று கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது...

ஓபிஎஸ் அணியில் மேலும் ஒரு அதிமுக மூத்த அமைச்சர்

தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் ஓட்டுமொத்தமாக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் ஒருசில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டுள்ள சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதை தமிழக மக்கள் ஒரு வெறுப்புடனே பார்த்து வருகின்றனர்...

கூவத்தூரில் சசிகலா சிறைவைப்பா? பொதுமக்கள் கொந்தளிப்பு

சென்னை ஈசிஆர் அருகே உள்ள கூவத்தூர் சொகுசு ரிசார்ட் ஒன்றில் கடந்த நான்கு நாட்களாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டை சுற்றிலும் சசிகலாவின் ஆட்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களது அட்டூழியதால் அப்பகுதி கிராமத்து மக்கள் பெரும் பாதிப்பு அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது...