சிவகார்த்திகேயன் பட வசனத்தை சரியான நேரத்தில் ஞாபகம் செய்த கலெக்டர்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சமூக விலகலை மிக தெளிவாக இரண்டே வரிகளில் விளக்கும் சிவகார்த்திகேயன் பேசிய வசனம் ஒன்றை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வசனம் இதுதான்:

நீ யாரா வேணும்னா இரு
எவனா வேணும்னா இரு ; ஆனா
என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு

இந்த ட்வீட்டை பார்த்த சிவகார்த்திகேயன், இந்த வசனத்தை ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி என்றும் இதற்குரிய பெருமை ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் அவர்களுக்குத்தான் போய் சேரும் என்றும் இரண்டே வரிகளில் அவர்தான் சமூக விலகலை மிக அழகாக விளக்கி இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் வசனத்தை சரியான நேரத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ஞாபகப்படுத்திய திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

வனிதாவின் முதல் பிறந்த நாள் புகைப்படம்: சிவாஜி மடியில் தவழும் அரிய காட்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டவர் வனிதா. யாரையும் பேச விடாமல் அவர் மட்டுமே பேசுவார் என்றும், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பார்

கொரோனா என்பதன் பொருள் என்ன??? ஏன் இந்த பெயர் சூட்டப்பட்டது???

கொரோனா வைரஸ்கள் ஒரு ''Enveloped Viruses" என்ற குடும்பத் தொகுப்பை சார்ந்தவை. இதற்கு “எண்ணெய் படலமான உறைக்குள் இருப்பது“ எனப் பொருள் சொல்லப்படுகிறது.

நெட்பிளிக்ஸில் பார்க்க வேண்டிய பத்து சிறந்த படங்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான். அதிலும் சீரியல்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை

டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

வைரஸ் என்றால் என்ன??? கொரோனா வைரஸ் எப்படி உடலில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது???

வைரஸ்களால் தனியாக வாழவோ அல்லது வளர்ச்சி சிதை மாற்றங்களைச் செய்யவோ முடியாது. எப்பொழுதும் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களையே வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.