close
Choose your channels

முதல்முறையாக ரூ.100 கோடி சாதனை: 'பேட்ட' வசூல் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம்

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை ஏற்கனவே எட்டிவிட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் ரிலீஸான அனைத்து தியேட்டர்களிலும் இரண்டாவது வாரமாக ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் 'பேட்ட' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை மிக விரைவில் நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை இன்று செய்தியாளர்களிடம் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் உறுதி செய்துள்ளார். இந்த படம் வெளியாகி எட்டு நாட்கள் ஆகியுள்ளதாகவும் 10 அல்லது 11 நாளில் இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை எட்டிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இந்த படத்திற்கு அனைத்து தரப்பில் இருந்து பாசிட்டிவ் விமர்சனம் வந்து கொண்டிருப்பதாகவும் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் இதனால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.