அதிகாலை 4 மணி காட்சி தேவையில்லை: திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி..!

  • IndiaGlitz, [Tuesday,October 17 2023]

அதிகாலை 4 மணி காட்சி தேவை இல்லை என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்து என்றும் 4 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு முதல் காட்சியை அனுமதிக்கலாம் என்றும் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

தமிழ்நாட்டில் 95% தியேட்டர்களில் ’லியோ’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. ’லியோ’ படத்தை 6 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 8:00 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கட்டுப்பாடு இன்றி காட்சிகளை ஒளிபரப்பு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். எங்களது கோரிக்கையை அரசு பரிசீலிக்க உள்ளது.

’லியோ’ திரைப்படத்திற்கு அரசின் அழுத்தம் சிறிதும் இல்லை, அரசு நெருக்கடி கொடுக்கிறது என்பது தவறான தகவல். தமிழ்நாடு அரசின் முடிவுக்கு கட்டுப்படுவோம். அதிக கட்டணம் வசூலித்தால் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காலை 7 மணி காட்சியால் பள்ளி அலுவலகம் செல்வோருக்கு இடையூறு இருக்காது, அலுவலகம் செல்வோர் காலை 7 மணிக்கு காட்சியை விரும்புகின்றனர்’ என்று தனது பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

More News

'லியோ' சிறப்பு காட்சி விவகாரம்.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி முக்கிய தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் தமிழ்நாடு தவிர பல மாநிலங்களில் அதிகாலை 4 மணி, 7 மணி

பிக்பாஸ்: மாயாவை கதறியழ வைத்த கூல்சுரேஷ்.. விசித்ரா காலில் விழுந்ததால் பரபரப்பு..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில் மாயாவை கூல் சுரேஷ் கதறியழ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோல்ட் மெடல் வாங்கிய ஆத்விக் அஜித் குமார்.. வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்..!

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் கோல்ட் மெடல் வாங்கி உள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'லியோ'வுடன் ரிலீசாக இருந்த திரைப்படம்.. திடீரென ரிலீஸ் தேதி மாற்றம்..!

 தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் 20ஆம் தேதி பாரதிராஜா நடிப்பில், மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'மார்கழி திங்கள்' என்ற திரைப்படம்

'தங்கலான்' நடிகரை லண்டனில் சந்தித்த மாளவிகா மோகனன்.. வைரல் புகைப்படம்..!

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.